Friday 17th of May 2024 02:43:38 AM GMT

LANGUAGE - TAMIL
-
சிட்னியில் சமூக முடக்க நிலை  மேலும் இரு வாரங்கள் நீடிப்பு!

சிட்னியில் சமூக முடக்க நிலை மேலும் இரு வாரங்கள் நீடிப்பு!


அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான சிட்னியில் புதிய கொரோனா கொத்தணி தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் நகரத்தில் சமூக முடக்க நிலை இன்று புதன்கிழமை முதல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

சிட்டினில் சமூகத்தில் இருந்து கடந்த 24 மணி நேரங்களில் 97 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முடக்க நிலை குறைந்தது ஜூலை 30 வரை நீடிக்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்துள்ளார்.

புதிய கட்டுப்பாடுகளின் கீழ் சிட்னி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும். அத்தியாவசிய பணிகள், அத்தியாவசிய பொருட்களை வாங்கவேண்டிய தேவை மற்றும் உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவையின் நிமித்தம் மாத்திரமே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.

இந்த அறிவிப்பு கவலையளிக்கிறது. எனினும் தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடக்க நிலையை குறைந்தது இரு வாரங்களுக்கு நீடிப்பதைத் தவிர வேறு வழியில்லை என சிட்னியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பெரெஜிக்லியன் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE